வடக்கு கிழக்கு மலையக பாடசாலை அபிவிருத்திக்கு இந்தியா உதவி

Spread the love

வடக்கு கிழக்கு மலையக பாடசாலை அபிவிருத்திக்கு இந்தியா உதவி

வடக்கு கிழக்கு மற்றும் பெருந்தோட்ட பாடசாலைகளில் பெருந்தோட்ட மற்றும் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் நிதி உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பெக்லெ (Gobal Baglay) உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் கல்வி அமைச்சில்

நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மற்றும் பெருந்தோட்ட பாடசாலைகளைப் போன்று அபிவிருத்தி தேவையைக் கொண்ட நாட்டின் ஏனைய

பாடசாலைகளை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இந்த விசேட சந்திப்பின் போது கல்வி அமைச்சர் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக்கொண்டார்.

இதற்கு அமைவாக எதிர்காலத்தில் ஏனைய பாடசாலைகளின் அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply