வடக்கு கிழக்கில் தொடரும் கடத்தல் சபையில் சிறீதரன் எம்.பி!video

Spread the love

வடக்கு கிழக்கில் தொடரும் கடத்தல் கைதுகள்: கேள்வி கேட்டால் புலனாய்வாளர்கள் என்று வெருட்டல்; சபையில் சிறீதரன் எம்.பி!

யாழ் தேர்தல் மாவட்டத்தின் வலி வடக்கு பகுதியில் 18 கிராம அலுவலர் பிரிவில் பகுதியளவு குடியேற்றமே செய்யப்பட்டிருக்கிறது, 3 கிராம அலுவலர் பிரிவில் முற்றாக குடியேற்றங்கள்

எதுவுமே ஏற்படுத்தப்படவில்லை. அதே போல் கிளிநொச்சியின் பச்சிளைபள்ளி பிரதேச அலுவலர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் கண்ணிவெடி அகற்றப்படவில்லை என்று மக்கள்

குடியேற்றப்படவில்லை. இப்படியான நிலையில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் 1 பாராளுமன்ற ஆசனத்தை குறைத்திருப்பது பிழையான ஒரு செயல். இந்த தவறு விரைவில் திருத்தியமைக்கப்பட வேண்டும் என இந்த உயரிய சபை மூலமாக கோரிக்கை விடுக்கிறேன்.

என தனது கருத்துக்களை நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் தனது உரையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்தார்

click here full video

    Leave a Reply