லண்டன் வீதிகளை காப்பி அடித்த இலங்கை – பஸ் பயணிக்க தனி பாதை

Spread the love

லண்டன் வீதிகளை காப்பி அடித்த இலங்கை – பஸ் பயணிக்க தனி பாதை

வீதி நிரல் சட்டத்தில் மற்றுமொரு நடைமுறை இன்று முதல் (23 ஆம் திகதி) பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய செனரத்

தெரிவிக்கையில் பஸ் முன்னுரிமை ஒழுங்கின் ஊடாக பயணம் செய்யக் கூடிய பயணிகள் போக்குவரத்து பஸ்கள், அலுவலக

சேவையில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் அதற்கான அனுமதி பெற்றுள்ள வான்கள், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும்

வான் மற்றும் பஸ்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பஸ் முன்னுரிமை ஒழுங்கு மூலம் வேறு வாகனங்களுக்கு பயணிக்க முடியாது எனவும் பஸ் வண்டி ஒன்றை முந்திச் செல்வதற்காக

மாத்திரம் இரண்டாவது ஒழுங்கிற்கு பிரவேசிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply