லண்டன் பாராளுமன்றம் முன்பாக முள்ளிவாய்க்கால் போராட்டம் – படங்கள் உள்ளே
இன்று 18-05-2021 மதியம் லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில், லீவர் பூல் லைம் ஸ்ட்ரீட் முன்பாகவும் தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள்
என்ற அமைப்பினர் முள்ளி வாய்க்கால் நினைவு நிகழ்வை நடத்தினர் ,மதியம் ஒருமணி முதல் இரண்டு மணிவரை இந்த நிகழ்வு இடம்பெற்றது
இலங்கையில் அடக்குமுறைக்கு உள்ளாக்க படும் தமிழர்களுக்கான விடுதலை ,காணாமல் போனவர்கள்
விடுதலை ,மற்றும் முள்ளி வாய்க்காலில் சிங்கள இன படுகொலைக்கு நீதி என்பனவற்றை வேண்டி இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது
காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க ,நிகழ்கால கொரனோ விதிகளை கடைப்பிடித்து மேற்படி நிகழ்வு இடம்பெற்றுள்ளது
உலகம் தழுவிய நிலையில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்ய பட்ட அப்பாவி மக்கள் நினைவுகூற படுகின்றனர் .12 ஆண்டுகளை கடந்த பொழுதும் இதுவரை இந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை என்பது வேதனையாகிறது