லண்டனுக்கு விமானம் ஓடிய -2 விமானிகள் கொரனோவால் பலி
துருக்கிய நாட்டின் மிக பெரும் திறமை வாய்ந்த விமானிகள் பலியாகியுள்ளனர்
துருக்கிய விமான சேவை நிறுவனத்தில் பணி புரிந்த இவர்கள் இருவரும்
கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்
விமான பயணிகளிடம் இருந்து கடத்த பட்ட நோயினால் ,பாதிக்க பட்ட
இவர்கள் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் பலியாகினர் என்ற
தகவலை அந்த நாட்டு விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது
லண்டனுக்கான விமான சேவையை நடத்தி வந்த விமானத்தின் ஓட்டிகளாக இவர்கள் செயல்பட்டுள்ளனர் ,அவ்வாறானவர்களே இவ்விதம் பலியாகியுள்ளனர்
மேலும் லண்டனில் இருந்து துருக்கி சென்ற 262 துருக்கிய பயணிகள் சிறப்பு முகாமில் அடைக்க பட்டு தனிமை படுத்த பட்டுள்ளனர் .
மருத்துவ சோதனைகளின் பின்னர் நோயானது இல்லை என கண்டறிய பட்டால் மட்டுமே இவர்கள் விடுவிக்க படுவார்கள் என தெரிவிக்க படுகிறது