லண்டனில் நபர் அடித்து கொலை – துடி துடித்து இறந்த பரிதாபம்
நேற்றுஇரவு பத்து மணியளவில் லண்டன் Camden பிரதான வீதியில் நாற்பது வயது நபர்
ஒருவர் மர்ம நபர் ஒருவரால் கோரமாக அடித்து படுகொலை செய்ய பட்டுள்ளார்
விரைந்து வந்த அம்புலன்ஸ் சேவை பிரிவினர் சிகிச்சை வழங்க
முற்பட்ட பொழுதும் நபர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்து போனார்,
இவர் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி துடித்து கொண்டிருந்த பொழுது மக்கள் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்துள்ளனர்
எனினும் போலீசாருக்கு தெரிவிக்க பட்டுள்ளது
இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
மேற்படி கொலையை புரிந்த இருபது வயது நபர் கைது செய்ய பட்டு தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வருகின்றார்,
இந்த படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை
தற்போது லண்டனில் இது போன்ற குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது