றிஷாட் பதியுதீன் தேசிய வைத்தியசாலையில் அனுமதி

Spread the love

றிஷாட் பதியுதீன் தேசிய வைத்தியசாலையில் அனுமதி

சுகயீனம் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு பிரின் பொறுப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன்தான் சுகயீனமுற்றிருப்பதாக அதிகாரிகளுக்கு அறிவிதுள்ளார்

மருத்துவப் பரிசோதனைக்காக அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் – டயகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

    Leave a Reply