யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதி இராணுத்தினரால் கிருமி நீக்கம்
யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதியினை யாழ்ப்பணத்தில் உள்ள இராணுவ வீரர்கள் நேற்று (30) கிருமி தொற்று நீக்கம் செய்துள்ளனர்.
திருநெல்வேலியில் உள்ள ஆனந்த குமாரசுவாமி பெண்கள் விடுதி மற்றும்
பாலசிங்கம் ஆண்கள் விடுதி என்பவற்றுடன் கொக்குவில் புதிய பெண்கள்
விடுதி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளும் இவ்வாறு கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
அண்மையில் யாழ் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவிடம்
பல்கலைக்கழக அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகொளுக்கினங்க குறித்த தொற்று நீக்கப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இத் தொற்று நீக்கப்பணிகளுக்கு
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் தமது ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர்.