யாழ் சென்னை விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
யாழ் சர்வதேச பலாலி விமான நிலையத்திற்கும் ,சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் இன்று (12) ஆரம்பமாகிறது.
இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பமாகும் இந்த விமான சேவைக்கு அமைவாக , சென்னை விமான நிலையத்தில் இருந்து பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அலையன்ஸ் ஏர் விமானம் இன்று காலை 10:50 அளவில் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளது.
யாழ் சென்னை விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
அதே விமானம் முற்பகல் 11:50 மணிக்கு சென்னைக்கு புறப்பட உள்ளதாக பலாலி விமான நிலைய செயற்பாட்டு முகாமையாளர் லக்ஷ்மன் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து ,திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரு நாடுகளுக்கும் இடையே விமான சேவைகள் இடம்பெறும்.
2019ஆம் ஆண்டில், சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. எனினும்,
கொரோனா தொற்று காரணமாக விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.