யாழ் குருநகர் கடற்பரப்பில் 181 கிலோ கேரள கஞ்சா

யாழ் குருநகர் கடற்பரப்பில் 181 கிலோ கேரள கஞ்சா
Spread the love

யாழ் குருநகர் கடற்பரப்பில் 181 கிலோ கேரள கஞ்சா

யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் (15) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 181 கிலோ கிராம்

எடையுள்ள கேரள கஞ்சா (ஈரமான எடை) கொண்ட டிங்கி படகுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டைச் சூழவுள்ள கடல் மற்றும் கடற்கரையை

உள்ளடக்கி, கடற்படையினர் வழக்கமாக ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

யாழ் குருநகர் கடற்பரப்பில் 181 கிலோ கேரள கஞ்சா

இதன்படி, யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் வடக்கு கடற்படை கடற்படை பிரிவுமேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகு பரிசோதிக்கப்பட்டது. அங்கு, 04 பைகளில் 900

கிராம் பொதி செய்யப்பட்ட 181.900 கிலோ கேரள கஞ்சாவுடன் (ஈரமான எடை) ஒரு சந்தேகநபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார். டிங்கி படகும் கைப்பற்றப்பட்டது..

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 60 மில்லியன் ரூபாவாவுக்கும் அதிகம் என்றும் நம்பப்படுகின்றது.

மேலும், கேரள கஞ்சாவுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29
வயதுடைய சந்தேக நபர், யாழ்ப்பாண பகுதியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

No posts found.