யாழ் உள்ளிட்ட உள்ளூர் விமானநிலையங்களை இயக்க நடவடிக்கை

Spread the love

யாழ் உள்ளிட்ட உள்ளூர் விமானநிலையங்களை இயக்க நடவடிக்கை

எதிர்வரும் 26 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவது நிலையான அட்டவணையின்றி செல்லும்

விமான நடவடிக்கையாகும் Traveling aircraft operations என்று சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச இதுதொடர்பாக தெரிவிக்கையில், இலங்கையில் மீண்டும் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிப்பதற்காக நடவடிக்கைகள்

மேற்கொள்ப்பட்டுள்ளன. வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் 4 விமான நிலையங்களை திறப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்hர்.

இதற்கமைவாக இலங்கையில் யாழ்ப்பாணம், கட்டுநாயக்க, மத்தள மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு வணிக

விமானங்களுக்கும் நிலையான நேர அட்டவணையின்றி செல்லும் விமானங்களும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள

அனுமதிகிடைக்க்கூடும்..இதன்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய சுகாதார

ஆலோசனைகள் பின்னர் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச விமான சேவைகளுக்காக இலங்கை மீண்டும் திறக்கப்படும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply