யாழ்தேவி ரெயில் மதவாச்சி வரையில் சேவை
யாழ்தேவி ரெயில் தடம் புரண்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரெயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைவாக, மதவாச்சி மற்றும் வவுனியாவிற்கு இடையில் பஸ்கள் மூலம் பயணிகள்செல்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து மதவாச்சி வரையில் ரெயில்சேவை இடம்பெறுகிறது. மதவாச்சியிலிருந்து வவுனியா தொடக்கம்
காங்கேசன்துறை வரையில் ரெயில்சேவைகள் வழமை போன்று இடம்பெறுகின்றன.