யாழில் புகையிரதத்தில் மோதுண்டு வாலிபர் மரணம்
இன்று மதியம் 1.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கோவில் வீதி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் பாய்ந்து குறித்த நபர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக அததெரண செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.