யாழில் நபர் அடித்து கொலை -குளக்கரையில் வீசப்பட்ட சடலம்
அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு சடலம் அங்கு கொண்டுவந்து
போடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
ஊரதீவு சிவன் ஆலய குளக்கரையிலேயே அவரது சடலம் இன்று
அதிகாலை கண்டறியப்பட்டது என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகர் ரூபன் சர்மா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.