யாழில் சுவரொட்டிகளை கிழித்தெறிய கோரிக்கை

Spread the love

யாழில் சுவரொட்டிகளை கிழித்தெறிய கோரிக்கை

யாழ். மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் ஒட்டப்படும் தேர்தல் விளம்பர சுவரொட்டிகள் கிழித்தெறியப்படும் நிலையில், யாழ்.

நல்லுார் ஆலய சுற்றாடலில் அருவருப்பை உண்டாக்கும் வகையில் பாரதியார்

சிலை மீது ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றவேண்டும் என பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

தேர்தல் காலத்தில் பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டுவது வழமை

என்ற போதும் அவ்வாறு ஒட்டப்படும் சுவரொட்டிகள் அவை மற்றவர்களை

கவரும்படி இருக்க வேண்டுமே தவிர மற்றவர்களுக்கு அருவருப்பை உண்டாக்கும் வகையில் அமைய கூடாது.

அவ்வாற அருவருப்பை உண்டாக்கும் வகையில் நல்லுார் ஆலய சுற்றாடலில்

பாரதியார் சிலை மீது வேட்பாளர் ஒருவர் தேர்தல் சுவரொட்டியை ஒட்டியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் தேர்தல் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுக்

கொண்டிருக்கும் நிலையில் இந்த சுவரொட்டிகள் அகற்றப்படாமல் உள்ளது

. முதலில் இவ்வாறான சுவரொட்டிகளே அகற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் பலர் கூறியுள்ளனர்.

      Leave a Reply