யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம்

யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம்
Spread the love

யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம்

கரடியனாறு – மரப்பாலம், புத்தம்புரிக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டகப்பட்ட சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மயிலவெட்டுவானை சேர்ந்த 42 வயதுடைய இராசமன்னன் தேவராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம்

குறித்த நபர் நேற்று இரவு களத்தில் மீன்படிக்கச் சென்றவர் காலையில் வீடு திரும்பாத நிலையில், அவரை உறவினர்கள் தேடிச் சென்ற நிலையில் குளத்துக்கு அருகாமையில் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்