முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலை

Spread the love

முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலை

இலங்கை டவடக்கு தமிழர் பகுதியாக விளங்கும் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலம்பில் கிராம பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த இருவர்,

அவ் வீட்டிலிருந்தவரை கோரமாக தாக்கி படு கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டிற்கு நேற்று இரவு வந்தவர்களுக்கும், உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் ஏற்பட்ட கை கலப்பு இந்த கொலையில் முடிவடைந்துள்ளது

குறித்த சம்பவத்தில், உயிரிழந்தவர் அலம்பில் தெற்கு, அலம்பில் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முல்லைத்தீவு அளம்பில் கிராம பகுதியில் இடம் பெற்ற இந்த அடித்து கொன்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது
செய்வதற்கான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

முல்லைத்தீவு அளம்பில் கிராமத்தில் அத்துமீறி வீடு புகுந்து குறித்த நபர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்த கிராமத்து மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலை

குறித்த நபரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற நபர்களை கைது செய்யும் வேட்டையில் விசேட காவல்துறை அணியினர் ஈடுபட்டு வருகின்றனர்

இலங்கை நாட்டில் தொடராக இடம்பெற்று வரும் இவ்விதமான வன்முறை குற்ற சம்பவங்களினால் தினம் தோறும் பலர் பலியாகிய வண்ணம் உள்ளனர்

பெருகி வரும் இவ்விதமான குற்ற செயல்களை தடுக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கையை மேற் கொள்ளவில்லை என்ற குற்ற சாட்டு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது

பெருகிவரும் இவ்வாறான படுகொலை சம்பவங்களை தடுத்து நிறுத்த மக்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து செய்யல் பட வேண்டும் என சமூக நல ஆரவாளர்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர்

முல்லைத்தீவு ஆகுதியில் இவ்விதமான கொலைகள் அதற்க்கு முன்னரும் இடம்பெற்று இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

இலங்கையில் இந்தியாவை போன்று மக்கள் அடித்து கொலை செய்யப்படும் சம்பங்கள் மகிந்த ராஜபக்சே ஆட்சியில் ஆரம்பித்து வைக்க பட்டது ,போதைவஸ்து மற்றும் வன்ம செயல்பாடுகளினால் இந்த படுகொலை களம் திறக்க பட்டு வருகிறது

    Leave a Reply