முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிணை
Spread the love

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

காலி நீதவான் நீதிமன்றமே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிக்கு பிணை வழங்கியது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிணை

நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு தலா 50 லட்சம் ரூபா சரீர பிணை இரண்டு மற்றும் 50,000 ரூபா ரொக்கப் பிணையும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் சொகுசு கார் ஒன்றிற்கான பாகங்களை பொருத்தியமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.