மின்னல் தாக்கி 11 மாடுகள் சாவு ஓமந்தையில் நடந்த சோகம்
மின்னல் தாக்கியதில் 11 மாடுகள் பரிதாபகரமாக ஓமந்தை பகுதியில் இறந்துள்ளன .
வயல் வெளி பகுதியில் மாடுகள் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ,மரம் மீது வீழ்ந்த மின்னல் இடி தாக்குதல் ,மாடுகள் மீது வீழ்ந்த நிலையில் அதே இடத்தில மாடுகள் பலியாகின .
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்களை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் மின்னல் தாக்குதலில் சிக்கி ஆண்டு தோறும் பல டசின் மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .