மாமாவின் மரணத்திற்கு வந்த மருமகன் மரணம்

மாமாவின் மரணத்திற்கு வந்த மருமகன் மரணம்
Spread the love

மாமாவின் மரணத்திற்கு வந்த மருமகன் மரணம்

மாமாவின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்கு வந்திருந்த மருமகன், மரம் முறிந்து விழுந்து பலியான பெருந்துயர் சம்பவம் ஒன்று கம்பளை, அட்டபாகை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு (18) சுமார் 10.45 மணி அளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கம்பளை – அட்டபாகை தோட்டத்தை சேர்ந்த இராமகிருஷ்னன் (வயது – 76) என்பவர் இயற்கை மரணம் எய்திய நிலையில் அவருக்கான இறுதிக் கிரியைகள் இன்று (19.10.2022) இடம்பெறிவருந்தன.

மாமாவின் மரணத்திற்கு வந்த மருமகன் மரணம்

சடலம் அஞ்சலிக்காக அவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே மரண வீட்டு வளாகத்தில் இருந்த மரம் மருமகன் மீது முறிந்து விழுந்ததில் அவர் (ரட்னசாமி) உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, அட்டபாகை தோட்ட பகுதியில் பாடசாலை உட்பட மக்கள் நடமாடும் பகுதிகளில் முறிந்து விழக்கூடிய அபாயத்தில் பல மரங்கள் உள்ளன.


எனவே, அவற்றை அகற்றி தமது உயிரை பாதுகாக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply