மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி

Spread the love

மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி

புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியின் மாணவ தலைவர்களுக்கான ஒரு நாள் தமைமைத்துவ பயிற்சி கல்லூரியின் அதிபர் எஸ்.சந்திரமோகன் தலைமையில் யாழ்ப்பானம் நோர்த் லங்கா சிட்டி

பல்கலைகழகத்தின் இக்குனர் வி.கோபால் நோர்த் லங்கா சிட்டி பல்கலைகழகத்தின் மாத்தளை கிளையின் ஒருங்கினைப்பாளர் ஜீவரட்ணம் ஆகியோரின் ஏற்பாட்டில் கல்லூரியில் நடைபெற்றது.

இவ் தலைதமைத்துவ பயிற்சியின் பிரதான விரிவுரையாளராக யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் உப பீடாதிபதியும் உளவளதுறை ஆலோசகருமான பேராசிரியர் கலாநிதி

பா. தனபாலன் அவர்கள் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கி வைத்தார்.

குறிப்பாக மாணவ பராயத்தில் இருந்து மாணவர்களுக்கு தலைமைத்தவ பன்பினை உருவாக்கும் பொருட்டும். இன்றைய மாணவர்கள் நாட்டின் நாளைய தலைவர்கள் என்பதற்கு இனங்க அதற்கு

மாணவர்களை தயார்படுத்தும் அதே வேலை மலையக சமூகத்திற்கு நல்ல ஒழுக்கம் உள்ள சீடர்களாக மாணவர்களை உறுவாக்கும் நோக்கில் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் பிரதி அதிபர் பொருப்பான ஆசிரியர்கள் அயற் பாடசாலை அதிபர்கள் பாடசாலையின் அபிவிருத்தி குழுவின் செயலாளர் பா.திருஞானம் உட்பட மாணவ தலைவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

    Leave a Reply