மாணவர்களின் பேரணியில்நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று பிற்பகல் முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
உணவக வசதி, விடுதிகள், மஹபொல மற்றும் அடக்குமுறை சட்டங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது