மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் video

Spread the love

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் video

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள்; நாளை அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உத்தரவு

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனை பார்வையிட்ட

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் நாளை அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக புனர்வாழ்வுவைத்தியசாலையை

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் video

நிர்மாணிப்பதற்கான அடிக்கல்நாட்டி வைக்கப்பட்ட நிலையில் குறித்த வைத்தியசாலையில் கட்டடங்களை

அமைப்பதற்காக காணி துப்புரவு பணிகள் இடம்பெற்று வந்தன.

இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாகதெரிவித்து அந்த பகுதிக்கு வருகை தந்த மனிதநேய கண்ணிவெடி

அகற்றும் பணியாளர்கள் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்தகாணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டதை அவதானித்த பணியாளர்கள் மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் மனித எலும்புக்கூட்டு எச்சங்களை பார்வையிட்டதுடன்

முல்லைத்தீவு மாவட்டநீதிபதி எஸ் லெனின்குமார் அவர்களின் கவனத்திற்குகொண்டு சென்றனர்.

இன்று பிற்பகல் குறித்த இடத்திற்கு வருகை தந்தமுல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் அவர்கள் குறித்த இடத்தை பார்வையிட்டார்.

இதனையடுத்து குறித்த பகுதியில் மேலும் மனித எச்சங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நாளை அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

இதேவேளை, குறித்த பகுதியில் ஊடகவியலாளர் வீடியோ எடுப்பதற்கு பொலிசாரால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது

மாங்குளம் வைத்தியசாலை
https://www.youtube.com/watch?v=9JiqwekzCts

Leave a Reply