எமது அரசாங்கத்தினால் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாள் ஒன்றுக்கான வேதனத்தை
வழங்குமாறு கோரியுள்ள போதும் பெருந்தோட்ட நிருவனங்கள் அதனை வழங்க மறுப்பு தெரிவித்து வருகிறது.
எனவே பெருந்தோட்ட நிறுவனங்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபாய் சம்பளத்தை வழங்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம்
ஒப்படைக்குமாறு இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலபிட்டி பகுதியில் நேற்று (19) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச மருத்துவ முகாம் ஒன்றுக்கு
வருகை தந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.