தொடரும் மர்ம கொலைகள் – பீதியில் மக்கள்

Spread the love

தொடரும் மர்ம கொலைகள் – பீதியில் மக்கள்

திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் பிரதேசத்தில்

கைவிடப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குச்சவெளி பிரதேசத்தில் நேற்று (06) மாலை பொதுமக்களினால் இனங்காணப்பட்ட குறித்த சடலம் தொடர்பில் குச்சவெளி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து

குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுத்துறை உக்வத்தை விஜித மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சனத் எடுக்சூரிய (வயது 39) எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கொலையா அல்லது இயற்கை மரணமா என குச்சவெளி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந் நிலையில் குறித்த சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்

.

    Leave a Reply