ஈராக் தலைநகர் பாக்தாத்தில் டயாரன் சதுக்கம் அருகே உள்ள மக்கள் நெரிசல் மிகுந்த சந்தைப்பகுதியில் நேற்று 2 பேர்
சந்தேகத்துக்கு இடமளிக்கும்வகையில் நடமாடிக்
கொண்டிருந்தனர். அவர்களை பாதுகாப்பு படையினர் பின்தொடர்ந்து சென்றனர்.
அப்போது, இருவரும் தங்கள் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை
வெடிக்கச் செய்தனர். இதில் 32 பேர் பலியானார்கள். சுமார் 110 பேர் காயமடைந்தனர்.
கடந்த 3 ஆண்டுகளில் ஈராக்கில் நடந்த முதலாவது தற்கொலைப்படை
தாக்குதல் இதுவே ஆகும். ஐ.எஸ். பயங்கரவாதிகள் பாணியை
நினைவுபடு்த்தினாலும், இதற்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.