மனதை மாற்று ….!
சக்தி தரும் சாமிக்கொரு
சலங்கை ஆட்டம் போட்டுவிடு
புத்தி திறந்து மாறிவிட – உன்
புன்னகையை காட்டி விடு
ஆத்திரத்தில் வீசும் சொல்
ஆழ காயம் தந்து விடும்
மூத்திரத்தில் நோய்களை தான்
முழு மருத்துவம் கண்டு விடும்
வீற்றிருக்கும் ஆடம்பர
வீட்டுக்குள்ளே ஒளி இன்றின்
வீடிருந்து என் செய்வாய் ..?
விபரம் உண்டா கூறி விடு
மமதைக்குள் மனம் புதைத்து
மாளிகையில் வாழாதே
மனம் இருந்தால் வீதி உளார்
மனம் குளிர உணவு இடு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 12-11-2021