மத்திய மாகாணத்தில் 1,076 புதிய நோயாளிகள்
மத்திய மாகாணத்தில் இதுவரை 1,076 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அறுவர்
மரணித்துள்ளனர் என்று, மத்திய மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைவாக கண்டி மாவட்டத்தில், இன்று (30) காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 35 தொற்றாளர்கள்
இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார் என்றும் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹத்தரலியத்த பொலிஸ் பிரிவு, தேதுனுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே, கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது மேற்படி நபர் உயிரிழந்துள்ளார் என்றும் பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது
உறுதியானதாகவும் மேற்படித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ்
தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் 535 தொற்றாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 126 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்