மது விருந்து நடாத்திய மாணவ மாணவிகள் கைது
வெலிமடை பகுதியில் கைவிடப்பட்ட கட்டிடத்தில் மது விருந்து நடத்திய பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெலிமடை பொலிஸார் குறித்த கட்டிடத்தை சுற்றிவளைத்துள்ளனர்.
பழைய கட்டிடத்தில் விருந்து வைத்து கொண்டிருந்த 5 பாடசாலை மாணவர்கள் மற்றும் இரண்டு பாடசாலை மாணவிகளை பொலிஸார் கைது செய்தனர்.
அதிக விலைக்கு விற்கப்பட்ட மதுவை இந்த மாணவர்கள் அருந்தியதாக கூறப்படுகிறது.
மேலும் விசாரணையில், அவர்கள் தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக கூறி கைவிடப்பட்ட கட்டிடத்தில் கூடி மது விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த கும்பல் பூட்டை உடைத்து கட்டிடத்திற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.