மக்களை காப்பாற்றுவதே என் நோக்கு – புத்தாண்டு செய்தியில் கோட்டபாய
நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்படும் எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுப்பதற்கு
தன்னார்வமாக ஒன்றுபடும் எமது மக்கள் இந்த பண்டிகை காலத்திலும் சமூக
இடைவெளியை பேணி வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன்
செயற்படுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.