பொலிஸ் ஆட்சேர்ப்புக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு
பொலீஸ் ஆட்சேர்ப்புக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக
யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோணா அச்ச நிலைமை தொடர்பில்
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சர் தலைமையிலான யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்ட போதே பொலிஸ் அத்தியட்சகர் இதனை தெரிவித்தார்
.யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியம் என்றும் அவர் இதன்போது கூறினார்.