256 பொலிஸாருக்கு கொரோனா
மேல் மாகாணத்தில் 256 பொலிஸாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் 6 பேர் பூரண சுகமடைந்துள்ளனரெனவும் மேலும் 250 பேர்
தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 317 பொலிஸார் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதுடன், 1,447 பொலிஸார் சுயதனிமையில்
இருப்பதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.