பெங்களூரில் 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களுரூ, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாடசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து விரைந்து வந்த பொலிஸார், பாடசாலைகளில் இருந்து மாணவ, மாணவியரை வெளியேற்றினர். மேலும், பாடசாலைகளில் தீவிர
சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை கண்டுபிடித்தனர்.
பெங்களூரில் 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
அதேவேளை, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பாடசாலைகளில் ஒன்று மாநில துணை முதல் மந்திரி டிகே சிவக்குமாரின் வீட்டிற்கு எதிரே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டலால் பெங்களூருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- இஸ்ரேல் இன படுகொலை
- துப்பாக்கிச் சூடு களுத்துறையில்
- இலங்கையில் துக்கதினம் பிரகடனம்
- சிறைக்கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு
- உழவு இயந்திரம் கவிழ்ந்தது
- ISISசேர்ந்த இலங்கையர் இந்தியாவில் கைது
- போர் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்
- ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
- இராணுவவாகனம் மோதி யுவதி பலி
- இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்