பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில்

Spread the love

பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில்

சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைய இராணுவத்தினரால் 3 ஆவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் தேசிய வேலைத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகள் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் நேற்று (01) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முன்னனி சுகாதாரத்துறை ஊழியர்கள் உட்பட முப்படை, பொலிஸார், சுகாதார மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் தெரிவுசெய்யப்பட்ட ஏனைய முன்கள ஊழியர்களும் இத்திட்டத்தில் இணைத்து கொள்ளவுள்ளனர்.

இத்திட்டம் நேற்று காலை பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சுற்றுலா, விமான நிலையம் மற்றும் ஏனைய துறைகளில் தொற்று நோய் தடுப்பு பணிக்காக முன்னணியிலிருந்து பணிபுரியும் அனைவருக்கும் வழங்கப்படும் என்று பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

ஆறு மாதங்களுக்குப் முன்பாக தடுப்பூசிகள் இரண்டினையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க முடியும் என்றும், தற்போதும் நாளாந்தம் 500 – 600 வரையான தொற்றாளர்கள் கண்டறியப்படும் அதேவேளை சுமார் 14,000 வரை தனிமைப்படுத்தலில் உள்ளமையால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியிலும் பொதுமக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தினார்.

பூஸ்டர் தடுப்பூசிகளாக பைஸர் தடுப்பூசியை தொற்று நோய் பரவல் தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் முன்னணி பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற ஒழுங்கில் வழங்க தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply