புத்தர் சிலை உடைப்பு – 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
கேகாலை நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாவனெல்ல உட்பட பல இடங்களிலுள்ள புத்தர் சிலைகளை உடைத்து இனங்களுக்கு
இடையிலான ஒற்றுமையை சீர்குலைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் இந்த குற்றப்பத்திரம்
தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.