பிரித்தானியாவில் தொடங்கியுள்ள W2W மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் ! photo
தடை நீக்கத்திற்கான நடைப்பயணம் ” WALK FOR LIFT THE BAN” எனும் முழக்கத்துடன் வேல்ஸ் நாடாளுமன்ற தொகுதியல் இருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலக வரையிலான W2W ( wales to
westminster ) மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் இன்று வெள்ளிக்கிழமை (23-04-2021) தொடங்கியுள்ளது.
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த சட்டப்போராட்டத்தில், தடையினை மறுபரிசீலனை செய்ய
உள்துறை அமைச்சுக்கு 90 நாட்களை சிறப்பு தீர்ப்பாயம் 90 நாட்கள் வழங்கியிருந்தது. இக்காலக்கெடு நெருங்கி வருகின்ற நிலையில் பிரித்தானியா வாழ் தமிழர்கள்
தடைநீக்கத்திற்கான தமது விருப்பினை அரசாங்கத்தினை நோக்கி வெளிப்படுத்தும் வகையில் lifttheban.uk எனும் இணையத்தளம் செயற்பட்டு வருகின்றது.
நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், அந்நாடாளுமன்றத்தின் ஊடாகவே தடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ
அரசாங்கம் தனது வாதுரையில் தெரிவித்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்விடயத்தினை கவனத்தில் கொண்டு செல்லும் வகையில் இந்த இணையத்தளம் செயற்படுகின்றது.
பிரித்தானிய வாழ் தமிழர்கள் தமது பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலகுவாக தடைநீக்கத்துக்கான தமது விருப்பினை இந்த இணையத்தளத்தின் மூலம் வெளிப்படுத்த முடியும்
என்ற நிலையில், பொதுமக்களுக்கு இது தொடர்பில் அரசியல் விழிப்பினை ஏற்படுத்தும் நோக்கில் எனும் இந்த நடைபயணம் தொடங்கியுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களான திரு தேவராஜா நீதிராஜா, திரு இராஐதுரை பார்த்தீபன் இவர்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள்,
செயற்பாட்டாளர்கள், மக்கள், ஆதரவாளர்கள் என பலர் தங்களையும் இன்றைய நாளில் நடைப்பயணத்தல் இணைந்து கொண்டு பயணிக்கின்றார்கள் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.