பிரிட்டன் டோவர் எல்லை சோதனை மையத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
பிரிட்டன் டோவர் எல்லையோர சோதனைப்குதி மையத்தின் மீது ,பெற்றோல் குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
காரில் வருகை தந்த நபர் ஒருவர் ,திடீரென மூன்று பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றுள்ளார் .
இவ்வாறு தப்பித்து சென்றவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மேற்படி குண்டு தாக்குதலின் பின்புலம் தொடர்பில் ,காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
இது தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
மேற்படி குண்டு தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .