பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளின் பெயர் பட்டியல் விரைவில்

இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
Spread the love

பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளின் பெயர் பட்டியல் விரைவில்

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிகளின் பெயர் பட்டியலைத் தயாரிக்க எதிர்பார்ப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த நபர்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த வருடத்தில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் ஓரளவு அதிகரிப்பு காணப்படுவதாகவும் உதய குமார அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டில் இலங்கை முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த 1,618 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், இது 2023 ஆம் ஆண்டில் 1,639 காணப்படுகிறது.

2022 ஆம் ஆண்டில் 1,232 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் அவ்வாறான சம்பவங்கள் 1,497 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 2022 ஆண்டில் 13 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதுடன், 2023 ஆண்டில் அது 22 ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.