பளையில் காணமல் போனவர் – அழுகிய நிலையில் சடலமாக மீட்பு -தொடரும் கொலைகள் photo

Spread the love

பளையில் காணமல் போனவர் – அழுகிய நிலையில் சடலமாக மீட்பு -தொடரும் கொலைகள்

பளையில் காணாமல் போன கல்லூரி மாணவன் ஆனையிறவு புலோப்பளை கடல் நீரேரி -பகுதியில் சடலமாக மீட்க பட்டுள்ளார்

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இந்த மாணவனை தேடி குடும்ப உறவினர்கள் காவல் துறையில் முறைபாடு செய்திருந்தனர்

இவ்வாறான நிலையில் தற்போது புலோப்பளை கடல் நீரேரி பகுதியில் அழுகிய நிலையில் இவர்

    சடலமாக மீட்க பட்டுள்ளார் .இவர் மர்ம நபர்களினால் கடத்த பட்டு சித்திரவதை வதை செய்ய பட்ட பின்னர்

    படுகொலை செய்ய பட்டு ,ஆட்கள் அற்ற ஆனையிறவு பகுதியில் வீச பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் யாழ்ப்பாண பகுதியை மையமாக வைத்து இவ்வாறு எட்டு கொலைகள் இடம்பெற்றுள்ளன .

    அரசியல் வாதிகள் முதல் சாதாரண மக்கள் வரை இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளன

    இந்த அப்பாவி வாலிபனும் நீரில் மூழ்கி மூச்சு திணறி இறந்தார் என சட்ட வைத்திய அதிகாரி மரண சான்றிதழ் வழங்குவார் ,இவ்வாறே பலருக்கு வழங்க பட்டு வருகிறது ,

    இந்த கொலைகளின் பின்புலத்தில் உள்ள குழுக்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை,இந்த தொடர் கொலைகளினால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உறைந்துள்ளனர்

        Leave a Reply