பதுளையில் போதையில் குழந்தையை சுட்ட தந்தை
அதிக மதுபோதையில் இருந்த தந்தையொருவர், இரண்டு வயதான தனது மகன் மீதும் தன் மதும் கட்டுத்ததுப்பாக்கியால் சுட்டதால்,
இருவரும் பலத்த காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பசறை- பிபிலேகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய தந்தையே, இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், அதிக மதுபோதையில் இருந்ததாகத் தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில்
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.