நீ வேண்டும் எனக்கு …!
ஆழ குழியெடுத்து
அடியே நீ புதைத் தாலும்
வேர் பிடித்து நான் எழுவேன்
வேண்டும் வரம் பெற்றிடுவேன்
ஆழ நெஞ்சுக்குள்
அடியே நான் நினைத்து விட்டேன்
சாகு முன்னே நான்
சக்களத்தி கை பிடிப்பேன்
பிடிக்கலை என்றென்னை
பின் தொடரா போபவளே
பிடித்திருக்கு உனை எனக்கு
பிரியத்தை என் செய்வேன் …?
தனியே நீ போகையில
தற்காப்பு தருகிறேன்
பிரியத்தை கண்டேனும்
பிள்ளை மனம் மாறாயோ …?
உன் உரிமம் எனக்கென்று
உயில் எழுதி தந்து விடு
பின் தொடரா போகிறேன்
பிரியமுடன் உனை விட்டு
வன்னி மைந்தன்
ஆக்கம் -06-08-2020