நான் வாழ நீ வா ..!
இன்றேவா இதயம்தரவா
இக்கீதம் இசைந்தே இசைக்கவா
இசையே இணைந்தால் இசையாவேன்
இன்றே இணையே இசைவேன்
நீபாட நினைவுக்குள் நீராடா
நிகழ்காலம் நின்றாட
ஓடும்நதியாக ஓடுவேன்
ஓடும்கரை ஓடமாவேன்
நாள்தோறும் நான்வாழ
நீவா நினைவுதா
உன்னை உயிலெழுதி
உயிரே உயிரேதா
சீர்மோனை சீதனமா
சீரிட்டாய் சிக்கனமா
உன்னாலே ஊர்கிறேன்
உள்ளமே உயிராகிறேன்
எந்நாளும் என்நெஞ்சில்
ஏமனமே ஏறியாடு
எனக்காக என்னுயிரே
எந்நாளும் ஏக்கமிடு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 10-12-2021