நீ எந்தன் சாமி
நான் வணங்கும் ஆலயத்தில்
நீ எந்தன் சாமியடி
துயர் கறையை துடைக்கின்ற
தூரிகை நீயடி
கறை படியா ஓவியமே
கலங்காத காவியமே
நீயே எந்தன் மூச்சு
நிழல் காட்டும் பேச்சு
எதை மறந்து போனாலும்
உனை மறந்து போவேனோ ..?
விதி மிதித்து போனாலும்
மதியிழந்து தாழ்வேனோ …?
முகம் இழந்து போனாலும்
அகம் மறந்து வாழ்வேனோ ..?
நிலம் இழந்து போனாலும்
வானில் உன்னை பாரேனோ …?
சீனா பெரும் சுவராய்
சிறை பட்டு போனானே
நாளை உனை பார்க்க
நான் ஏங்கி நின்றேனே
பார்க்க மறந்து போனால் – இந்த
பார் அழிந்து போகும்
நினைவிழந்து போனால் – இந்த
நிகழ் காலம் சாகும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் -08-10-2020