நிரம்பி வழியும் குளங்கள் – வெள்ள பெருக்கு அபாயம்
தற்பொழுது பெய்துவரும் கன மழை காரணமாக மத்திய மலைநாட்டில்
நீர் ஏந்து பிரதேசங்களான காசல்ரீ மற்றும் மவுசாகல நீர்த்தேக்கங்களின்
நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர் நிலைக்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கெனியோன், லக்ஷபான, புதிய லக்ஷபா, பொல்பிட்டிய,
விமலசுரேந்திர ஆகிய மின் உற்பத்தி நிலையங்களில் உயர்ந்தபட்ச மின்
உற்பத்தி கிடைக்குமென மின்சார பொறியிலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.