நான் இறந்த பின் என் சொல்வாய் …?

Spread the love

நான் இறந்த பின் என் சொல்வாய் …?

கண்ணீரில் நீ குளிக்க
காளை மனம் வாடுதடி …
இது தீர வழியென்ன
இதயமே கேட்குதடி ….

அழுதழுது நீ களைத்து
அன்றாடம் களித்திருக்க …..
பொழுது வந்து எனை திட்டி
பொல்லாப்பை விதைக்குதடி ….

நீ எறிந்த கண்ணீர்க்கு
நியமாக நான் தானோ …?
ஏ தறிந்து எனை அடித்தாய்
ஏ மனமே பதில் சொல்லு …..

பழிக்குள்ள நான் சிக்கி
பலியாடாய் துடிக்கிறேன் ….
இருந்தென்ன லாபம் எண்ணு
இதயமும் உடைஞ்சிருச்சு ….

முச்சடங்கி வீழ்ந்தாலும்
முன்னே என்னை பார்க்காதே …
பேச்சடங்கி போன பின்னே
பேசியென்ன நீ காண்பாய் …?

-வன்னி மைந்தன் (T-ஜெகன் )
அக்கம் -15/08/2017

Home » Welcome to ethiri .com » நான் இறந்த பின் என் சொல்வாய் …?

Leave a Reply