நாட்டில் அமைதியை நிலைநாட்ட தயாராக இருக்கிறேன் – ரஜினி

Spread the love

நாட்டில் அமைதியை நிலைநாட்ட தயாராக இருக்கிறேன் – ரஜினி

நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமைதியை நிலைநாட்ட தயாராக இருக்கிறேன் – ரஜினிகாந்த்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இஸ்லாமிய மதகுருமார்கள் நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்துப் பேசினார்கள்.

இந்நிலையில் நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் டிவிட்

இதுகுறித்து தனது டுவிட்டரில் மேலும் கருத்து தெரிவித்த ரஜினி, “இன்று தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளை

சந்தித்து, அவர்கள் தரப்பு ஆலோசனைகளைச் கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் அன்பும், ஒற்றுமையும்

அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்காமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நாட்டில்

அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

நாட்டில் அமைதியை

Leave a Reply