நஷ்டத்தில் இயங்கும் ரயில்வே திணைக்களம்

Spread the love

நஷ்டத்தில் இயங்கும் ரயில்வே திணைக்களம்

இலங்கை ,கொழும்பு ; ரயில்வே திணைக்களம் தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில்,ரயில் வே திணைக்களம் பாரிய நஷ்டத்தில் இயங்குவதோடு 2021 இல் மொத்த வருமானம் 2.7 பில்லியன்களாக இருந்தது. நஷ்டம் 47 பில்லியன்களாக

பதிவாகியுள்ளதாக சம்பளம் வழங்க 7.8 பில்லியனும் மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்க 2.3 பில்லியன்களும் செலவிடப்பட்டது.

2012 இல் வருமானம் 4.8 பில்லியன்களாக இருந்தது. நஷ்டம் 34 பில்லியன்களாக இருந்தது. 2021 இல் வருமானம் 2.7 பில்லியன்களாவும் நஷ்டம் 47

பில்லியன்களாகவும் பதிவாகியுள்ளது. 2022 இல் வருமானம் குறைந்தது. வருமானம் 2.6 பில்லியன்களாகும். நஷ்டம் பில்லியன் 37 களாகும். 4000 கோடி

ரூபா வருடாந்த நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் ரயில்வே திணைக்கள ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் சிக்கல் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்

எரிபொருள் கடனாக பெறுவதில் பிரச்சினை ஏற்பட்டது.10 கோடி ரூபாவுக்கு மேல் நாளாந்த நஷ்டம் உள்ளது. சம்பளத்துக்கு மாத்திரம் 7.8 பில்லியன் ரூபா

வழங்கப்பட்டுள்ளது.மேலதிக நேரக் கொடுப்பனவாக 2021இல் 2.3 பில்லியன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரயில்வே திணைக்களத்தை எவ்வாறு நடத்த முடியும்?

நஷ்டத்தில் இயங்கும் ரயில்வே திணைக்களம்

121 ரூபாவாக இருந்த எரிபொருள் விலை 400 ரூபாவாக உயர்ந்துள்ளதால் ரயில் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. பஸ் கட்டணத்தை விட 50 வீதம் குறைவாக ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிகரித்த கட்டணத்தை அறவிட ரயில் நிலைய அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர். முன்னறிவிப்பின்றி தொழிற்சங்க

நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாமென ரயில்வே திணைக்கள உத்தியோகஸ்தர்களிடம் கோரியுள்ளோம்.ரயில்வே திணைக்கள செலவுகளை குறைப்பது தொடர்பாக அவர்களுடன்


பேசமுடியும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

    Leave a Reply