அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Spread the love

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை , கொழும்பு ; அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்

கலந்துரையாடப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மறுசீரமைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான

சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.அரசாங்கத் தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவும் இதில் கலந்துகொண்டார்.

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்;

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மறுசீரமைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்காக சகல அமைச்சுகளினதும் வரவுசெலவுகள் கடந்த சில தினங்களில் ஆராயப்பட்டன என்று தெரிவித்த அமைச்சர்,எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு

அமைச்சர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு ஆலோசனைக் குழுவொன்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்றும் நியமிக்கப்படும்.

இதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. எரிபொருள் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்கு கியு.ஆர்.குறியீட்டு

முறைப்பிரகாரம் அடுத்த மாதம் முதலாம் திகதியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

குறியீட்டு முறைமை தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. 40 லட்சம் பேர் இதில் தம்மைப் பதிவு செய்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச்

சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்பன எரிபொருளை விநியோகிக்கின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்

இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள், தனியார் பஸ்கள், பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸகள், பாடசாலை வான், அம்புலன்ஸ் வண்டிகள், விவசாய உபகரணங்கள் உட்பட தொழில் பேட்டைகளுக்கு எரிபொருள்

நிலையங்களுக்குப் புறம்பாக இலங்கை போக்குவரத்துச் சபைக்குரிய 107 டிப்போக்கள் ஊடாகவும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறினார்.

விவசாய உரத்திற்கான தட்டுப்பாடுக்கு ஒருவாரத்தில் தீர்வு:

இதேவேளை, விவசாய உரத்திற்கான தட்டுப்பாடு ஒருவார காலப்பகுதியில் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று விவசாய அமைச்சர்,

அமைச்சரவைக் கூட்டத்தின்போது தெரிவித்தாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் கூறினார்.

    Leave a Reply