நடிகர் மதுரை மோகன் காலமானார்
சிட்டிசன், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்த நடிகர் மதுரை மோகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (09) காலை காலமானார்.
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேல் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தவர் மதுரை மோகன். அவரது மீசை தான் அவரது அடையாளமாகவே பல படங்களில் அவருக்கு வாய்ப்புகளை பெற்றுத்தந்தது.
வயதான கதாபாத்திரங்களில் நடித்து வந்த மதுரை மோகனின் மீசை ரொம்பவே பிடிக்கும் என சிம்பு சொல்லியிருக்கிறார் என மதுரை மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகர் மதுரை மோகன் காலமானார்
நடிகர் அஜித் குமார் மட்டும் தனது ரசிகர் மன்றங்களை கலைக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் அவருக்கு இருக்கும் ரசிகர் படை மிகப்பெரியளவில்
இருந்திருக்கும் என்றும் சிட்டிசன் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் நடித்த அனுபவங்களையும் ஷேர் செய்திருந்தார்.
விஷ்ணு விஷால், காளி வெங்கட் நடித்த முண்டாசுப்பட்டி படத்தில் மதுரை மோகனுக்கு சிறப்பான கதாபாத்திரம் கிடைத்த நிலையில், தொடர்ந்து பல பட வாய்ப்புகள் மீண்டும் அவருக்கு கிடைக்கத் தொடங்கின.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த மதுரை மோகனுக்கு நடிகர் காளி வெங்கட் தனது அஞ்சலியை செலுத்தி உள்ளார்.
அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும்.
ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை ‘முண்டாசுப்பட்டி’ படத்தின்மூலம் வாய்ப்பளித்த
இயக்குனர் ராம்குமார் அவர்களுக்கும் என பதிவிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
மதுரை மோகனின் மறைவை அறிந்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
- கோட்டாபய தொலைபேசி இரகசியம் உரையாடல் அம்பலம்
- மாணவர்களை கோரமாக தாக்கிய பிக்கு
- யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு
- காணாமல் போனவர் சடலமாக மீட்பு
- அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக மாறியுள்ளதா இலங்கை
- அருளினி பாட்டால் அழுத மக்கள்
- சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
- பாழடைந்த வீட்டில் சடலம் கண்டுபிடிப்பு
- ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் இலங்கை வந்தார்
- அனுமதிப்பத்திரம் இல்லா ஓடும் பஸ்
- கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள்
- சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு