யாழில் சிக்கிய நகை கொள்ளையர்கள்
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் நடமாடும் மக்களிடம் நகைகளை இலக்கு வைத்து
கொள்ளையடித்து வந்த ஐவர் அடங்கிய குழு ஒன்று காவல்துறையிடம் சிக்கியுள்ளது
நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த மேற்படி குற்ற செயல் தொடர்பாக போலீசார் மேற்க்கண்ட
கண்காணிப்பு தேடுதல் வேட்டையின் பொழுதே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது